சந்தையின் போக்கு - 23.7.2008 ஜூலை 23, 2008
நேற்று கூறியது போல் இன்றைய ஏற்றம் நிரந்தரமாக இருக்க போவதில்லை.. மேலும் நல்ல சரிவுகளுக்கான வாய்ப்புகளை அதிகபடுத்தும் ஏற்றமாகவே பார்க்கிறேன்.
கவனம் தேவை….
என்னுடன் CHAT செய்ய விரும்புவர்கள்…. இங்கு உள்ள MEEBO வில் தொடர்பு கொள்ளவும்.
22.07.2008 - சந்தையின் போக்கு ஜூலை 22, 2008
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம், இன்று நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த பரபரப்புடன் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பங்கு வர்த்தகர்கள் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
இன்றை அரசியல் நிகழ்வுகளால் ஏற்பட போகும் ஏற்றமோ, இறக்கமோ நிரந்தரமானது கிடையாது. தற்காலிகமாக ஏற்படப்போகும் ஒரு ஏற்ற/இறக்கத்திற்கு ஒரு காரணம், தேவைபடுகிறது. அவ்வளவுதான்.
ஜுன் மாத இறுதியில் இருந்து, சந்தையை மிகப்பெறும் சரிவுகளில் இருந்து தாங்கி பிடிக்கும் சக்தியாக, கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி அன்று ஏற்பட்ட (GAPE DOWN) (4350) இருந்து வருகிறது. அதேபோல் மேலே செல்ல விடாமல் தடுக்கும் விதமாக 3800/900 நிலைகளில் அடிக்கடி இரு இடைவெளி உருவாகிறது. தற்பொழுது ஜூலை 17 அன்று ஏற்பட்ட ஒரு இடைவெளி உள்ளது. (GAP UP-3800-3900).
இன்றைய நிகழ்வுகள், 4350 என்ற நிலைக்கு அல்லது 3800 என்ற நிலைக்கு செல்ல வழி வகுக்கும். ஆனால் அது நிரந்தரமான ஒரு ஏற்றமாகவோ, இறக்கமாக இருக்க வாய்ப்புகள் இல்லை.
=======================================================================================================
கடந்த ஒரு மாத காலமாக உங்களில் பலருடன் யாஹூ வில். பேசிவந்தேன், இதில் நீங்கள் தெரிந்து கொன்டது என்ன என்பது எனக்கு தெரியாது.. ஏன் என்றால் உங்களில் பலருக்கு தங்களை பற்றி அறிமுகப் படுத்தி கொள்வதற்கே நிறைய தயக்கம்.
ஆனால் நான் இந்த ஒரு மாத காலத்தில் தெரிந்து கொன்டது நிறைய! இந்த பங்கு சந்தை எத்தனை விசாலமானது… இதற்குள் மறைந்து கிடக்கும் வாய்ப்புகள் எவ்வளவு அது எப்படிபட்டது… என்றும், அரட்டை அடித்து கொன்டே டெக்னிகல் பார்த்த பொழுது இன்னும் நிறைய கற்று கொன்டேன்.
நன்பர்களே தயவு செய்து இந்த மார்கெட்டை நேசியுஙகள். நம்புங்கள். அதனுடை போக்கில் செல்ல பழகுங்கள், அதனை நாம் போகும் பாதையில் இழுக்க முயற்சிக்காதிர்கள்.. கோடானு கோடி மக்கள் இதில் உள்ளார்கள். ஒவ்வொருத்தருடைய விருப்பதிற்கு ஏற்ப அதன் போக்கு மாறாது.
தினசரி 100 பாய்ன்ட் நிப்டி குறைந்தால் இன்னும் 40 நாளில் சந்தையை மூடிவிடுவார்களா. அப்படி ஆகாது நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்.. எப்பவும் இருக்கும். நம் கவலை எல்லாம், நாம் இங்கு வெற்றியாளர்களின் வரிசையில் இருக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், என்பதாகத்தான் இருக்க வேண்டும்..
இன்று பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, சார் சென்செக்ஸ் மீண்டும் எப்பொழுது 22000 க்கு மேலே போகும், ஏன் என்று கேட்டால், ரெம்ப லாஸ் சார். சந்தை ரெம்ப மோசமாக உள்ளது. அப்படியானால் மார்கெட் 20000 மேல் இருக்கும் போது நீங்கள் அதிகம் லாபம் பார்த்திர்களா என்றால். இல்ல சார் அந்த சமயமும் நஷ்டம் தான் என்று அதற்கான 10 காரணங்களை அடுக்குவார்கள்.
எனக்கு தெரிந்து மோசமான நிலையிலும் பல லட்சங்களை சம்பாத்தித்தவர்களும், மிக உச்சத்தில் / நல்ல ஏற்ற த்துடன் இருந்த காலத்தில் பல லட்சங்களை இலந்தவர்களும் இங்கு அதிகம் உள்ளார்கள்.
எல்லோரையும் டென்ஷன் ஆகாமல் பொறுமையாக இருஙகள் என்று சொல்கிறேன் யாரும் கேட்டதாக தெரிய வில்லை. எல்லோரும் இன்னும் ஒரு பரபரப்புடன் தான் உள்ளார்கள். எனக்கு தெரிந்து இந்த தொழிலில் வெற்றி பெற மிக மிக அவசியம் பொறுமை…. பொறுமை… பொறுமைதான்.
நான் தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவன், யார் என்ன மதம் மொழியாக இருந்தாலும் அவரவர் தெய்வத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நான் எப்பவும் ஒரு விசயத்தை முடியாது என்று சொல்வதே கிடையாது. பலருக்கு தெரியும், சார் எனக்கு இந்த அளவு லாஷ் என்ன பண்ணலாம் என்று கேட்கும் போது கூட ரெம்ப ஈஷி எடுத்து விடலாம் கவலை படவேண்டாம் என்றுதான் பேசுவேன். தயவு செய்து நெகடிவிவ் வைப்ரேஷனில் இருக்காதிர்கள். உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை அமையும், நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷனில் எப்பொழுதும் இருக்க பழகுங்கள். ஒரு நல்ல என்னங்களுடன் நம்பிக்கையுடன் உங்கள் நாளை துவங்குங்கள். அவநம்பிக்கையுடன் துவங்காதிர்கள்.
சார் மார்கெட் எப்படி என்று கேட்கும் போது கூட மார்கெட் மோசம் என்று தப்பா பேசுவது கிடையாது. நான் அந்த அளவிற்கு இந்த தொழிலை நேசிக்கிறேன். ஏன் என்றால் அது என்றும் ஏமாற்றுவது கிடையாது, நாம் ஏமாறுகிறோம், அதற்கு அதனை பொறுப்பாக்குகிறோம். மீண்டும் நினைவூட்டுகிறேன், அதன் கைபிடித்து அதன் போக்கில் செல்ல பழகுவோம், நாமாக ஒரு முடிவு எடுத்து விட்டு அதனை நம் பக்கம் வரவில்லை என்று சொல்ல வேண்டாம்.
எங்கள் பகுதியில் (தென்மாவட்டங்களில்) கண்மாய் அழிவு என்று ஒரு மீன் பிடி திருவிழா நடக்கும் அச்சமயம் எல்லோரும் ஒரு வித டென்ஷனா கரையில் காத்து கிடப்பார்கள். ஊர் பெரியவர் வெள்ளை கொடி அசைத்த வுடன் எல்லோரும் உள்ளே புகுந்து ஒரே அடிதடி முட்டி மோதி மீன்களை பிடிப்பார்கள். (எனக்கும் சின்ன வயதில் அனுபவம் உன்டு)
அப்படிதான் இங்கு அதிகமானவர்கள் என்னவோ இன்றே மார்கெட் கடைசி என்பது போல் நிறைய சம்பாதிக்க ஆசை படுகிறார்கள். அது தவறு தினசரி 2/3 டிரேடு பண்ணுங்க போதும். சிறுக சிறுக சேருங்கள்/சேமியுங்கள். சரியாக செய்தால் இதைவிட நல்ல தொழில் வேறு எதுவும் இல்லை.
எனக்கு தெரிந்ததை உங்களுடன் என்றும் பகிர்ந்து கொள்ள ஆர்வம் உள்ளது,
இது அறிவுரையோ ஆலோசனையோ கிடையாது, எனது அனுபவமே, நான் செய்த தவறுகள் ஏராளம். அதில் கற்ற பாடங்களும் அதிகம்.
17.07.08 பரிந்துரைகளின் செயல்பாடுகள் ஜூலை 21, 2008
1. Sell Rel Cap -Below 1028 tgt 1000 - Target Achived Made low - 1003
2. Buy ONGC Above 893 tgt 910/920 - Target achived - high 918
3. Sell BHEL Below 1418 tgt 1380 - not performed well.
4. Sell Adlabs Below 409 tgt 390 - 50% Achived made low 399
5. Sell Hindalgo Below 139 tgt 137 – Target Achived made low - 134
6. Buy DLF above 421 tgt - 445 – Target Achived by 3.20 so no use. (not performed well)
16.07.08 பரிந்துரைகளின் செயல்பாடுகள் ஜூலை 21, 2008
1. BUY BHEL - 1410 TGT 1440/50 – not performed well, made high 1424 only
2. BUY ONGC ABOVE 850 TGT 860/70 – Target Achived made high 875
3. BUY ADLABS ABOVE 409 TGT 420/28 – not traded above 409.
4. BUY RELIANCE IND ABOVE 2005 TGT 2030 – NOT PERFORMED WELL.
5. REL CAP – SELL BELOW 992 TGT 970/960 - TGT ACHIVED
6. BUY SUN TV ABOVE 277 TGT 285 - NOT TRADED ABOVE 277 – S/L TRIGERED,
REVERSE TRADE ACHIVED THE TGT MADE LOW – 255.
7. Dlf – SELL BELOW 430 TGT 420/15 – TGT ACHIVED – LOW 385.
8. Hindal – SELL BELOW 137.00 TGT 135 - MADE LOW – 135.60
இது நாட்டுக்கு நல்லது! ஜூலை 20, 2008
இது நாட்டுக்கு நல்லது!
இடதுசாரிகள், மத்திய அரசுக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியதால்- பிரதமர் தனது அரசின் மீது பாரளுமன்றத்திற்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஜனதிபதி கோர வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி இப்போதக்கு அநாவசியமகி விட்டது. பிரதமரே முன் வந்து, பாரளுமன்றத்தின் நம்பிக்கயைக் கோருகிற வாக்கெடுப்பைச் சந்திக்கப் போவதாக ஜனதிபதியிடம் தெரிவித்திருக்கிறார்.
பாரளுமன்றம் நம்பிக்கையத் தெரிவித்த பிறகு – அதவது, மெஜாரிட்டி பலத்தை நிருபித்த பிறகு – அணு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்பாக, சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள போவதாக பிரதமர் கூறியிருக்கிறார். அணு ஒப்பந்தத்தை பாரளுமன்றம் ஏற்கிறதா இல்லையா என்பதற்கு வக்கெடுப்பு நடத்த போவதில்லை – அதற்கு அவசியமும் இல்லை; பாளுமன்ற ஒப்புதலுடன் தான் இம்மதிரி ஒப்பந்தங்களை அரசு ஏற்கமுடியும் என்று சட்டமோ, மரபோ கிடையது. தனது அரசு, மெஜரிட்டி பல்ம் உள்ள அரசு என்று நிருபித்த பிறகு, அந்த பலத்துடன், ஒப்பந்தத்தின் அடுத்த கட்டங்களை பிரதமர் சந்திக்க விரும்புகிறார் – அவ்வள்வுதான்.
முலாயம் சிங் கட்சி, கொத்தாக தனது எம்.பி.க்களின் ஓட்டுக்களை அரசுக்கு ஆதரவாக அளித்தாள், அதற்கு மேல் தேவைப்படுகிற சில ஓட்டுக்களை உதிரிக் கட்சிகளிடமிருந்தும், ஒருசில சுயெச்சைகளிடமிருந்தும் அரசு பெற்று விடும். முலாயம் சிங் கட்சியைப் பிளந்துவிட, அல்லது முடிந்தவரையில் எம்.பி.க்களை அவர் கட்சியிலிருந்து வெளியே இழுத்து விட, மாயவதி மட்டுமல்லாமல், ஒரு தொழிலதிபரும் முனைந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
காங்கிரஸ் சும்ம இருக்கது; முலாயமின் ஆப்தர் அமர்சிங்கும் இதிலெல்லாம் கைதேர்ந்தவர்; அவருக்கும் தொழிலதிபர் ஆதரவு இருக்கிரது. ஆகையால் பணம் தாராளமாக விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். ஆக, அரசு கவிழுவதும், நிமிர்வதும், அணு ஒப்பந்ததைப் பொறுத்த விஷயம் அல்ல – இரு தரப்புகளின் பண பலத்தைப் பொறுத்தது. இது இந்திய ஜனநாயகம்.
கம்யூனிஸ்ட்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பது அதன் சாதக பாதகங்களைக் கருதி மட்டுமல்ல. “இந்த ஒப்பந்தம் ஏற்பாட்டால், அமெரிக்கா வுடனான இந்திய நட்பும், உறவும், ஒத்துழைப்பும் அதிகரித்து விடும்” என்பது இடதுசாரிகள, இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்ப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் – என்று அவர்களே கூறி வருகிறார்கள். இடதுசாரிகள் தங்கள் நிராகரிப்புக்குக் கூறுகிற காரணம் – நாம் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதற்கும் முக்கிய காரணம்.
அமெரிக்க உறவு பலப்படுவது, நம் நாட்டிற்கு நல்லது என்பது நமது கருத்து. இந்த கருத்து காங்கிரஸிற்கும் இருக்கிறது; பா.ஜ.க.வுக்கும் இருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும், மாநிலக் கட்சிகள் சிலவும் தான் இந்தக் கருத்தை ஏற்க மறுக்கின்றன; அதற்கு அவர்கள் கூறுகிற காரணம் – “அமெரிக்க உறவை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்” என்பதே.
இதற்கு காஷ்மீரின் ஓமர் அப்துல்லா தெளிவாக பதில் சொன்னார்; “ஒரு சர்வதேச ஒப்பந்தம். இந்தியாவிற்குப் பாதகமாகவோ, சாதகமாகவோ இருக்கலாம். ஆனால், ஹிந்து ஆதரவு ஒப்பந்தம், முஸ்லீம் ஆதரவு ஒப்பந்தம் என்று ஒருசர்வதேச ஒப்பந்தத்தை வர்ணிப்பது, சற்றும் ஏற்க முடியாது” என்றார் அவர். நம் கருத்தும் அதுதான்.
மக்களைப் பொறுத்தவரையில், ‘இந்த அணு ஒப்பந்தத்தின் காரணமாக இந்த அரசு போக வேண்டும்’ என்ற நினைப்பு அவர்களுக்கு இல்லை; அது பற்றி ஒரு அபிப்ராயமும் இல்லை. அதனால்தான் இத்தனை மாதங்களாக ‘அணு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைந்தால், ஆதறவை வாபஸ் பெறுவோம்’ என்று கூறி வந்த இடதுசாரிகள், இப்போது திடீரென்று ‘நாஙகள் ஆதரவை வாபஸ் பெற்றது அணு ஒப்பந்தத்திற்காக மட்டுமல்ல – விலை வாசி உயர்வு கூட முக்கிய காரணம்’ என்று, மக்களைப் பாதிக்கிற விலை வாசி விவகாரத்தையும், வழித் துணைக்காகச்சேர்த்து கொண்டிருக்கிறார்கள்.
இடதுசாரிகள் இப்படி கோஷத்தை மாற்ற வேண்டியிருக்கிறது என்றால், பா.ஜ.க.வும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக தாங்கள் போட்ட வேஷத்தைக் கைவிட வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. அடுத்தத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க.விற்கு பதவி ஏற்கும் வாய்ப்பு கிட்டினால் – அப்போது இந்த இந்த ஒப்பந்தத்தின் நடைமுறைப் பொறுப்புகளை பா.ஜ.க. ஏற்க வேண்டியிருக்கும். அதற்கான சாத்தியக் கூறு இருப்பதை உணர்ந்து, அக்கட்சி, இப்போதிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக, ‘அணுசக்தி ஒப்பந்த ஏற்பு’ என்ற நிலையை நோக்கிச் சென்று விடுவது நல்லது. இல்லையென்றால், நாளை திடீரென்று அந்த நிலைக்குத் தாவ வேண்டியிருக்கும்.
நம்மை பொறுத்தவரையில், இந்த ஒப்பந்தம் நிறைவேறுவது நாட்டிற்கு நல்லது; ஆகையால், அதை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிப்பது நல்லது; ஆகையால் ஒப்பந்தம் முக்கியமான கட்டங்களைக் கடக்கிறவரையிலாவது இந்த அரசு நீடிப்பது, நல்லது.
நன்றி : துக்ளக் (23/7/2008 - தலையங்கம்)
எது எப்படியோ அடுத்த இருதினங்களிள் தேசிய பங்குச்சந்தை 3825 -4351 என்ற இரு நிலைகளுக்கும் சரிசமமான் வாய்ப்புகளை கொன்ட மதில் மேல் பூனையாக உள்ளது.
இது எனது கருத்து. - சாய்கணேஷ்
இன்று ஒரு தகவல் - 18/07/2008 ஜூலை 19, 2008
அனில் திருபாய் அம்பானி குருப் சிமென்ட் உற்பத்தி துறையில் கால் பதிக்க முடிவுசெய்து உள்ளது. அதற்காக 10,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக குஜராத் அம்புஜா சிமென்டின் முன்னாள் இயக்குனர் திரு அனில் சிங்வி-யை RNRL நிறுவன்த்தில் சேர்த்து கொன்டு உள்ளது.
சுஸ்லான் எனர்ஜி தமிழகத்தின் காற்றாலை சாதனங்களின் தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்வதற்காக கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரு காற்றாலை சாதனங்கள் தயாரிக்கும் தொழிசாலையை அமைக்க ரூ.4500 கோடி முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளது.
RNRL மற்றும் SUZLON ENERGY பங்குகளில் நீன்ட கால முதலீடு செய்யலாம்…..
எங்கே செல்லும் நிப்டி (NIFTY) இன்று - 17.07.2008 ஜூலை 17, 2008
தினசரி தேசிய பங்குசந்தையின் குறியீடு (NIFTY) எதில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே மறுமொழியாக தெரிவிக்கவும்.
மிகசரியாக கணிப்பவர்களுக்கு 6 மாத சந்தா பரிசாக வழங்கப் படும்.
1அல்லது 2 எண்கள் வித்தியாசத்தில் கணிப்பவர்களுக்கு 1 மாத சந்தா பரிசாக வழங்க படும்.
போட்டி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 2.30 வரை.
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி, இன்று ஒரு வெற்றியாளரை எதிர் பார்க்கிறேன்.
சில நண்பர்களின் ஆலோசனைகளுக்கு இனங்க போட்டி விதிமுறைகளில் சிறிய மாற்றம். மேலும் இப்போட்டி சிறக்க தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்
Be ready for the last leg of the bear market and expect a new index by the end of jan 09
15.07.08 பரிந்துரைகளின் செயல்பாடுகள் ஜூலை 16, 2008
எங்கே செல்லும் நிப்டி (NIFTY) இன்று - 16.07.2008 ஜூலை 16, 2008
தினசரி தேசிய பங்குசந்தையின் குறியீடு (NIFTY) எதில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே மறுமொழியாக தெரிவிக்கவும்.
மிகசரியாக கணிப்பவர்களுக்கு 6 மாத சந்தா பரிசாக வழங்கப் படும்.
1அல்லது 2 எண்கள் வித்தியாசத்தில் கணிப்பவர்களுக்கு 1 மாத சந்தா பரிசாக வழங்க படும்.
போட்டி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 2.30 வரை.
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி, இன்று ஒரு வெற்றியாளரை எதிர் பார்க்கிறேன்.
சில நண்பர்களின் ஆலோசனைகளுக்கு இனங்க போட்டி விதிமுறைகளில் சிறிய மாற்றம். மேலும் இப்போட்டி சிறக்க தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்.
The formula for Success in Stock Market: patience, perspective and unfortunately failure


