முதல் வணக்கம்…..
அனைவருக்கும் என் இனிய வணக்கம். தமிழில் இது எனது முதல் முயற்சி.. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கு இணங்க என் அனுபவங்கள் மற்றும் எனக்கு கிடைக்கும் தகவல் முதலானவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள உள்ளேன்.
அதற்கு முன்பு என்னை பற்றி…..
பங்கு வர்த்தகம் எனது முழு நேர தொழில். இந்த தகவல்கள் அனைத்தும் எனக்காக தயார் செய்கிறேன்.
கூடுமானவரை நம்ப தகுந்த தகவல்களை சரி பார்த்த பிறகே இங்கு இடம் பெறும். அதே வேளை தகவல்களின் மீதான முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள்…
எனது அனுபவம் - பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டம் கிடையாது. இது ஒரு தொழில். அந்த அணுகுமுறை மிக அவசியம்.
இதில் பணம் சம்பாதிக்க அதிகம் தேவை பணம் இல்லை… தேவை அனுபவம்.. ஆர்வம்.. நம்பிக்கை..
பேராசை வேண்டாம்… லாபத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.. உங்களுடைய முதலீட்டை இழக்காமல் இருக்க வழிதேடுங்கள்…
என் ஆரம்ப காலத்தில் நிறைய நஷ்டத்தை சந்தித்து உள்ளேன்… பிறகு ஒரு பயிற்சியின் போது….. அது என் பேராசையால் தான் என்று அறிந்தேன்…
புதியவர்கள் தயவு செய்து day trading செய்யாதீர்கள்… நன்கு அனுபவம் பெற moneybhai.com வெப்தளத்திள் சிறிது காலம் விளையாடி பயிற்சி எடுக்கலாம்…
சிகரங்களை தொடலாம்… வாருங்கள்…..
சாய்கணேஷ்
“The first rule is not to lose. The second
rule is not to forget the first rule.”
“It’s far better to buy a wonderful
company at a fair price than a fair
company at a wonderful price.”
Warren Edward Buffett, CEO, Berkshire Hathaway,
Posted by Ganesh on ஏப்ரல் 9, 2008 at 3:35 மு.பகல்
நண்பர் சாய்கணேஷ்,
தங்களின் இந்த புதிய முயற்ச்சி தொடர, வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
கணேஷ்.
Posted by pcmohan417 on ஏப்ரல் 10, 2008 at 2:15 மு.பகல்
Congratulation keep it up
Thanking you
Dr Chandramohan
Posted by Ramesh on ஏப்ரல் 10, 2008 at 6:50 மு.பகல்
aLL THE BEST